Connect with us

Raj News Tamil

சரக்கு வாகனம் மோதியதில் இளைஞர் பலி..!

தமிழகம்

சரக்கு வாகனம் மோதியதில் இளைஞர் பலி..!

திருப்பாலைக்குடி அருகே உள்ள பழங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் ரமேஷ் (22). இவர் நேற்று மாலை தனது இரு சக்கர வாகனத்தில் தேவிப்பட்டினம் நோக்கி கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பத்தனேந்தல் அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனமும், இவரது இரு சக்கர வாகனமும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த திருப்பாலைக்குடி போலீஸார் ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான சரக்கு வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

More in தமிழகம்

To Top