Connect with us

Raj News Tamil

காசிமேட்டில் கரை ஒதுங்கிய 2 சிறுவர்களின் உடல்கள்!

தமிழகம்

காசிமேட்டில் கரை ஒதுங்கிய 2 சிறுவர்களின் உடல்கள்!

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தருண் (12), சாமுவேல் (13) ஆகிய சிறுவர்கள் கடந்த 13-ம் தேதி அன்று கடலில் குளிக்கச் சென்றனர். அப்போது திடீரென்று எழுந்த ராட்சத அலையால் அவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

அருகில் இருந்தவர்கள் கடலுக்குள் இறங்கி அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் சிறுவர்கள் கடலுக்குள் மாயமாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம் தீயணைப்புத் துறையினர் சிறுவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று மாலை(15.11.2023) சிறுவன் தருணின் உடல் கரை ஒதுங்கியது.

இதைத்தொடர்ந்து சிறுவன் சாமுவேல் உடலும் கரை ஒதுங்கியது. சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் வண்ணாரப்பேட்டை பகுதியே சோகத்தில் மூழ்கியது.

More in தமிழகம்

To Top