Connect with us

Raj News Tamil

சந்திராயன்-3: நிலவின் புதிய படங்கள் வெளியீடு!!!

இந்தியா

சந்திராயன்-3: நிலவின் புதிய படங்கள் வெளியீடு!!!

சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென்துருவதை ஆய்வு செய்வதற்காக எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

கடந்த 17-ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி மேற்கொள்ளப்பட்டது. விண்கலத்திலிருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர், நிலவின் முதல் படங்களை பகிர்ந்தது. பின்னர் கடந்த 18-ந்தேதி விண்கலத்தில் இருந்து பிரிந்த பிறகு லேண்டரின் சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டது.

பின்னர் நேற்று அதிகாலை 2 மணியளவில் இரண்டாவது முறையாக லேண்டரின் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 23-ந்தேதி மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

More in இந்தியா

To Top