Connect with us

Raj News Tamil

சபரிமலைக்கு சென்றிருந்த கணவன்.. காதலனை வீட்டிற்கே அழைத்த மனைவி.. இறுதியில் நடந்த கொடூரம்..

தமிழகம்

சபரிமலைக்கு சென்றிருந்த கணவன்.. காதலனை வீட்டிற்கே அழைத்த மனைவி.. இறுதியில் நடந்த கொடூரம்..

சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரபாவதி என்பவருக்கும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆரம்பத்தில் சந்தோஷமாக இருந்த இந்த தம்பதியினருக்கு இடையே, நாட்கள் செல்ல செல்ல சண்டை வந்துள்ளது.

பிரபாவதிக்கு வேறு சில ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி, கணேசன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில், ஐயப்பனுக்கு மாலை போட்டிருந்த கணேசன், சமீபத்தில் சபரிமலைக்கு சென்றிருந்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பிரபாவதி, தனது காதலன் மணிகண்டனை, இரவு வீட்டிற்கு அழைத்து, உல்லாசமாக இருந்துள்ளார்.

தினமும் இவ்வாறு நடப்பதை கவனித்த கணேசனின் தம்பி தங்கவேலு, வீட்டிற்குள் நுழைந்து, மணிகண்டனை அடித்து கீழே தள்ளியுள்ளார். பின்னர், தனது அண்ணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே, கடுமையாக காயம் அடைந்த மணிகண்டன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தங்கவேலுவை கைது செய்தனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top