தமிழகம்
சேதமாக கிடந்த சாலை.. கால்வாயில் விழுந்த வாகன ஓட்டி.. அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்..
சென்னை தாம்பரம் அடுத்துள்ள திருமலை நகர் பகுதியில், கால்வாயை ஓட்டிய சாலை பழுதடைந்துள்ளது. 3 சாலைகள் சந்திக்கும் இடம் என்பதால், அப்பகுதியில் செல்லும் வாகனங்கள், சில நேரம், கால்வாயில் கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த சாலை வழியாக, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், அந்த கால்வாயில் விழுந்துள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் சாலைகளை சீரமைக்காமலும் மழை நீர் கால்வாய்க்கு தோண்டப்பட்ட பணிகள் நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டதால் இது போன்ற விபத்துகள் அதிகரித்து வருகிறது என்றும், இதனை சரி செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
You must be logged in to post a comment Login