உலகம்
கூட்டமாக வந்த முன்னாள் காதலிகள்.. அதிர்ச்சியில் உறைந்த மாப்பிள்ளை.. திருமணத்தில் நடந்த கூத்து..
ஒருவர் ஒரே நேரத்தில் பல பெண்களை காதலித்து ஏமாற்றுவதை, சினிமாவில் நாம் பார்த்திருப்போம். ஆனால், அந்த பெண்கள், மொத்தமாக வந்து, பழிவாங்க நினைத்தால் என்ன ஆகும் என்று யோசித்து பாருங்கள்.. அப்படியான சம்பவம் ஒன்று, சீனாவின் யுனான் என்ற பகுதியில் நடந்துள்ளது.
தென்மேற்கு சீனாவில் உள்ள யுனான் என்ற மாகாணத்தை சேர்ந்தவர் சென். இவருக்கு கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி அன்று, திருமணம் நடக்க இருந்தது. அதன் ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென பல பெண்கள் கூட்டமாக, கோஷங்களை எழுப்பிக் கொண்டு, திருமண மண்டபத்திற்கு வந்துள்ளனர்.
இதனை பார்த்து அங்கிருந்த உறவினர்கள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பிறகே, அது சென்னால் ஏமாற்றப்பட்ட முன்னாள் காதலிகள் என்பது தெரியவந்தது. பின்னர், அந்த காதலிகளிடம் சென் சமாதானம் பேசியதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.
You must be logged in to post a comment Login