Connect with us

Raj News Tamil

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா! – அச்சத்தில் கேரள மக்கள்!

இந்தியா

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா! – அச்சத்தில் கேரள மக்கள்!

2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பல நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

கடந்த நவம்பர் மாதம் 479 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இம்மாதத்தின் துவக்கத்திலேயே 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

More in இந்தியா

To Top