இந்தியா
“பைக் மோதியதால் எலும்பு முறிவு” – பைக் ஓட்டிய தலித் இளைஞர் அடித்துக் கொலை!
உத்தரபிரதேச மாநிலம் டியோரியா என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர், கடந்த 13-ஆம் தேதி அன்று, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். திடீரென வாகன கட்டுப்பாட்டை இழந்த அந்த இளைஞர், எதிரே வந்த நடுவயது நபர் மீது மோதியுள்ளார்.
இதில், காயம் அடைந்த அந்த நபருக்கு, எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு பிறகு, அந்த தலித் இளைஞர் தனது வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர், அவரையே பின்தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல், ஆயுதங்கள் மூலம் கொடூரமாக தாக்கியுள்ளது.
இதில், சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து போன அந்த இளைஞரை, குடும்பத்தினர் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், குஜேஷர் யாதவ், ரம்ஹான்ஸ் யாதவ், சைலேஷ் யாதவ், ஸ்ரீராம் யாதவ், ராம் பிரவேஷ் யாதவ், ராஜூ யாதவ் ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர்.
You must be logged in to post a comment Login