தமிழகம்
தமிழக ஆளுநரை மாற்றக்கோரி திமுக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி!
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இதனால் ஆளுநரை மாற்ற வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக கவர்னரை ஜூன் 27-ந் தேதிக்குள் மத்திய அரசு மாற்றாவிட்டால், 28-ந் தேதி மதுரை சிம்மக்கலில் உள்ள கருணாநிதி சிலை முன்பாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து சாவேன் என ஆவின் தி.மு.க. தொழிற்சங்க தலைவரான கணேசன் போஸ்டர் ஒட்டியிருந்தார்.
இந்நிலையில் அங்கு திடீரென காரில் வந்த கணேசன், கருணாநிதி சிலை முன்பாக தான் வைத்திருந்த மண் எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login