உலகம்
புத்தாண்டு தினத்துக்கு நண்பர்களுக்கு ட்ரீட்.. பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள்.. கற்பனைக்கு எட்டாத தொகை..
2022-ஆம் ஆண்டு முடிந்து, 2023-ஆம் ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு பிறந்ததை, பல்வேறு தரப்பினரும், தங்களால் இயன்ற அளவில் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஒரு சிலர் கடற்கரைகளுக்கு நண்பர்களுடன் சென்று கொண்டாடினர், ஒரு சிலர், நட்சத்திர விடுதிகளுக்கு சென்று ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர், ஒரு சிலர் கோவில்களுக்கு சென்றும், வேறு சிலர் வீட்டிலேயும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இவ்வாறு இருக்க, ஒருவர் தன்னுடைய நண்பர்களுக்கு நட்சத்திர விடுதியில் விருந்து கொடுத்து, புத்தாண்டை கொண்டாடியுள்ளார். 18 நண்பர்கள் கலந்துக் கொண்ட இந்த விருந்தின் கட்டணத் தொகையை கேட்டு நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதாவது, துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டிடத்தில் அமைந்துள்ள நட்சத்திர விடுதிக்கு, 18 பேர் வந்தள்ளனர். ஒன்றாக அமர்ந்து விதவிதமான உணவு வகைகளை ஆர்டர் செய்த அவர்கள், ஒரு புடி புடித்துள்ளனர். இறுதியில், 1 கோடியோ 39 லட்ச ரூபாயை கட்டணமாக செலுத்தியுள்ளனர்.
இதுதொடர்பான பில், இணையத்தில் வெளியாகி, அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில், நெட்டிசன்களை ஆழ்த்தியுள்ளது. ஒரு பக்கம் உண்ண உணவு எதுவும் இல்லாமல் பொதுமக்கள் இறக்கும் சம்பவங்கள் நடந்துக் கொண்டிருக்க, மறுபக்கம் 18 பேர் உண்பதற்கு 1.39 கோடி ரூபாய் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தரப்பினரிடம் மட்டுமே பணம் குவிகிறது என்பதற்கு இதுவே உதாரணம் என்று பல்வேறு தரப்பட்ட கமெண்ட்கள் அந்த பதிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login