Connect with us

Raj News Tamil

கனமழை எதிரொலி – செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு!

தமிழகம்

கனமழை எதிரொலி – செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு!

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 452 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 22.35 கன அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது. அதாவது 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 3210 மில்லியன் கன அடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக 105 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, ஏரியில் இருந்து வினாடிக்கு 25 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை மணிக்கு 1000 கன அடியாக உபரிநீர் திறக்கப்படுகிறது. இதனால் குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, காவனூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top