Connect with us

Raj News Tamil

நீட் தேர்விற்கு பயந்து மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

தமிழகம்

நீட் தேர்விற்கு பயந்து மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் ஆங்காங்கே தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அரங்கேறி வரும் நிலையில் நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்த மாணவி ஞானப்பிரியா (15) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.

நாமக்கல் மாவட்ட ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் ஆயிபாளையம் பகுதியைச் சேர்ந்த சலவைத்தொழிலாளி பழனிசாமியின் மகள் ஞானப்பிரியா. இவர் பள்ளி பாடங்களுக்கும், நீட் தேர்வு பாடங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாகவும், படிப்பதற்கு சிரமமாக உள்ளதாகவும் பெற்றோரிடம் மனவருந்தி கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெற்றோர், ஞானப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீஸார், ஞானப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வு அச்சத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top