Connect with us

Raj News Tamil

உத்தரபிரதேசத்தில் கனமழை: 19 பேர் பலி!

இந்தியா

உத்தரபிரதேசத்தில் கனமழை: 19 பேர் பலி!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் மேற்கூரை இடிந்து விழுந்தது, நீரில் மூழ்கியது, மின்னல் தாக்கியது என பல்வேறு சம்பவங்களில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களால் 24 மணி நேரத்தில் 19 போ் உயிரிழந்ததாக மாநில நிவாரண ஆணையம் திங்கள்கிழமை மாலை தெரிவித்தது.

மழையின்போது மின்னல் தாக்கியதில் 4 போ் உயிரிழந்தனா். அதிகப்பட்சமாக ஹா்தோய் மாவட்டத்தில் 4 போ், பாராபங்கி மாவட்டத்தில் 2 போ், பிரதாப்கா் மற்றும் கன்னௌஜ் மாவட்டத்தில் தலா 2 போ், அமேதி, தியோரியா, ஜலௌன், கான்பூா், உன்னாவ், சம்பல், ராம்பூா், முசாஃபா்நகா் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவா் உயிரிழந்துள்ளனா்.

More in இந்தியா

To Top