Trending
நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய கணவன்.. ஏன் என்று கேள்வி எழுப்பிய பெண் கொலை!
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் குமார். தனியார் கம்பெணியில் மேனேஜராக பணியாற்றி வரும் இவருக்கு, பபிதா என்ற மனைவி உள்ளார். சொந்தமாக அழகு நிலையம் ஒன்றை அவர் நடத்தி வருகிறார். இந்த தம்பதிகளுக்கு, 9 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில், புத்தாண்டு தினத்தையொட்டி, பபிதா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ள நிலையில், தனது நண்பர்களுடன் குமார் புத்தாண்டு கொண்டாடியுள்ளார். காலையில் பபிதா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீடு அலங்கோலமாக இருந்துள்ளது. இதனை பார்த்து கடும் கோபம் அடைந்த அவர், குமாரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து பேசியதில் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த குமார், தனது மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். ஆனால், அப்போது போதையில் இருந்ததால், மனைவி இறந்ததை அறியாமல், மீண்டும் தூங்குவதற்கு சென்றுள்ளார்.
நீண்ட நேரம் குழந்தைகள் எழுப்பியும், பபிதா அசையாமல் இருந்ததால், பதறிய குமார், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பபிதாவின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login