இந்தியா
மனமகளின் வயிற்றை பார்த்த கணவன்! முதலிரவில் காத்திருந்த அதிர்ச்சி!
மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியை சேர்ந்த நபருக்கு, இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. அன்றைய தினம் இரவு, இருவருக்கு முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது, மணமகளின் வயிற்றுப் பகுதியில், தையல்கள் போடப்பட்டதற்கான அடையாளங்கள் தென்பட்டன.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தன் மனைவியிடம் கேட்டுள்ளார். ஆனால், அந்த பெண், அதற்கு சரியான பதில் அளிக்காமல், மழுப்பி உள்ளார். இதையடுத்து, துருவி, துருவி மணமகன் கேட்டதற்கு, உண்மை என்ன என்பதை தெரிவித்துள்ளார். அதாவது, அந்த பெண், இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இளைஞரின் மூலம் கர்ப்பம் தரித்த பெண், கடந்த 3 மாதங்களுக்கு பின், அறுவை சிகிச்சை மூலம், அந்த கருவை கலைத்துள்ளார். இதனை மறைத்து திருமணம் செய்து வைத்ததால், அந்த பெண்ணை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
இதற்கிடையே, பெண் வீட்டார், மனமகனுக்கு எதிராக காவல்துறையில் புகாரளித்துள்ளனர். ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் தனக்கு நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என அந்த நபர் கோரிக்கை வைத்துள்ளார்.
You must be logged in to post a comment Login