Connect with us

Raj News Tamil

டெல்லியில் ஐஐடி மாணவர் தற்கொலை!

இந்தியா

டெல்லியில் ஐஐடி மாணவர் தற்கொலை!

டெல்லியில் ஐஐடி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) அணில் குமார் (வயது 21) என்ற மாணவர் பி.டெக் கணிதம் மற்றும் கம்பியூட்டிங் வகுப்பு பயின்று வந்தார்.

இந்நிலையில், அணில் குமார் நேற்று மாலை விடுதியில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அறையின் கதவு வெகுநேரமாக திறக்காததை கண்டு சந்தேகமடைந்த சக மாணவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அறையின் கதவை உடைத்துள்ளனர்.

பின்னர் போலீசார், மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in இந்தியா

To Top