சினிமா
உரசிய ஐஸ்வர்யா ராய்.. என்ஜாய் பண்ணிய ஜெயம் ரவி.. மனைவி பார்த்தால் என்ன ஆகுறது?
எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவல், அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் என்று பெரும் நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.
இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி, பெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம், வரும் வெள்ளிக் கிழமை அன்று வெளியாக உள்ளது. இதனால், படத்தின் புரோமோஷனுக்காக, பல்வேறு நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். அப்போது, ஐஸ்வர்யா ராயும், ஜெயம் ரவியும் ஒரே மேடையில் ஒன்றாக நடந்து வந்தனர்.
அப்போது, கால் வழுக்கி, ஜெயம் ரவியை ஐஸ்வர்யா ராய் உரசி விடுகிறார். இதனை கொண்டாடும் வகையில், ஜெயம் ரவி ரியாக்ஷன் கொடுக்கிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இந்த வீடியோவை உங்கள் மனைவி பார்த்தால்.. என்ன ஆகும்” என்று கிண்டலாக கேட்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login