சினிமா
”காந்தாரா படக்குழுக்கு” இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்..!
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படம் காந்தாரா. பழங்குடி மக்களின் இறை வழிபாட்டை மையக்கருவாக கொண்டு உருவான இப்படம், வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான காந்தாரா படக்குழுவினரை, ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டினார்.
இந்த நிலையில் கமல்ஹாசனும் படத்தை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் ரிஷப், இந்திய சினிமாவின் லேஜண்டான கமல் சாரிடன் கடிதம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login