தமிழகம்
மின்கம்பத்தில் பெண்ணை கட்டிவைத்து கொடுமை படுத்திய ஆட்டோ ஓட்டுனர்கள்..!
கன்னியாகுமரியில் கேலி கிண்டல் செய்த ஆட்டோ ஓட்டுநர்களை பெண் ஒருவர் தட்டி கேட்டதால் அந்த பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
கன்னியாகுமரியை சேர்ந்த பெண் ஒருவர் தனது 9 வயது மகளுடன் வசித்து வருகிறார். கணவரை இழந்த அப்பெண் மார்த்தாண்டம் பகுதியில் ஒரு மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தான் நடத்தி வரும் மசாஜ் சென்டருக்கு செல்லும் போது அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் அவரை கேலி கிண்டல் செய்தும் தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் என்று அழைத்தும் துன்புறுத்தி வந்துள்ளனர்.
நேற்று காலை வழக்கம் போல் அந்தப்பெண் தனது மசாஜ் சென்டருக்கு சென்ற போது அங்கு நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் தான் வைத்திருந்த மிளகாய்ப்பொடியை எடுத்து ஆட்டோ டிரைவர்கள் மீது எறிந்து தன்னை காப்பாற்ற முயன்றுள்ளார்.
உடனே அருகில் இருந்தா மற்ற ஆட்டோ ஓட்டுனர்கள் அந்த பெண்ணை ஒரு மின்கம்பத்தில் துணியால் கட்டி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மின்கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்டு காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து மூன்று ஆட்டோ ஓட்டுநர்களை கைது செய்தனர்.
மின்கம்பத்தில் ஒரு பெண்ணை கட்டிவைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login