Connect with us

Raj News Tamil

ரஜினிக்கு பிறகு கார்த்தி தான்.. பெருமிதம் கொண்ட தருணம்..

சினிமா

ரஜினிக்கு பிறகு கார்த்தி தான்.. பெருமிதம் கொண்ட தருணம்..

வித்தியாசமான கதைக் களங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகர் கார்த்தி. முதல் படத்தில் இருந்தே நடிப்பில் முத்திரை பதித்த கார்த்தி, உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இந்நிலையில், ரஜினிக்கு பிறகு, நடிகர் கார்த்திக்கு, பெருமைமிகு தருணம் ஒன்று நடந்துள்ளது.

அதாவது, ஜப்பான் நாட்டை சேர்ந்த இரண்டு பேர், கைதி படத்தின் மூலம் கார்த்தியின் தீவிர ரசிகர்களாக மாறியுள்ளனர். அதன்பிறகு, அவரது நடிப்பில் உருவான மற்ற படங்களையும் பார்த்து ரசித்துள்ளனர்.

இதற்கிடையே, கார்த்தி நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி இருப்பதை அறிந்த அவர்கள், தமிழ் ரசிகர்களுடன் அந்த படத்தை காண முடிவு செய்தனர். அதன்படி, சென்னையில் 3 நாட்கள் தங்கியிருந்த ஜப்பான் ரசிகர்கள், 4 முறை அந்த படத்தை பார்த்துள்ளனர்.

மேலும், நடிகர் கார்த்தியை நேரில் சந்தித்து, உரையாடி, தங்களது அனுபவங்களையும் பகிர்ந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்தின் முத்து படம் வெளியான பிறகு, ஜப்பானில் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர்.

அதன்பிறகு, ரஜினியின் படம் வெளியானால், தமிழ்நாட்டிற்கு வந்து, அவரது படம் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். ரஜினிக்கு பிறகு, கார்த்திக்கு தான், இத்தகைய பெருமைமிகு தருணம் அரங்கேறியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top