Connect with us

Raj News Tamil

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மன்சூா் அலிகான்..!

சினிமா

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மன்சூா் அலிகான்..!

திரிஷா குறித்து மன்சூா் அலிகான் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவ மன்சூர் அலிகானுக்கு கண்டனங்கள் வலுப்பெற்றன. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

இதனை தொடர்ந்து, நேற்று சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரான மன்சூா் அலிகானிடம், சர்ச்சையான வீடியோ குறித்து விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், மன்சூா் அலிகான் இன்று அறிக்கை ஒன்றை வெளியுட்டுள்ளார். அதில் “எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு’’ என
தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், சமூகத்திடம் தான் கேட்க நினைத்ததை எல்லாம் குறிப்பிட்டு, எனக்காக வாதிட்டவர்களுக்கு நன்றி, என்னை எதிர்த்தவர்களுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள் என்றும் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top