Connect with us

Raj News Tamil

மேயர்- கவுன்சிலர்கள் மோதல்?.. 3 கவுன்சிலர்கள் இடைநீக்கம்: திமுக அதிரடி!

அரசியல்

மேயர்- கவுன்சிலர்கள் மோதல்?.. 3 கவுன்சிலர்கள் இடைநீக்கம்: திமுக அதிரடி!

திருநெல்வேலி மாமன்ற உறுப்பினர்கள் மூவர் உட்பட நான்கு பேர் திமுகவில் இருந்து தற்காலிமாக நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில்,

“திருநெல்வேலி மாநகராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ், 20-வது வார்டு உறுப்பினர் மன்சூர், 24-வது வார்டு உறுப்பினர் ரவீந்தர் மற்றும் 7-வது வார்டைச் சேர்ந்த மாநகர பிரதிநிதி ஆர்.மணி (எ) சுண்ணாம்பு மணி ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மேயர் – கவுன்சிலர்கள் மோதல் காரணமாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

More in அரசியல்

To Top