அரசியல்
பாஜக தலைவர் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பணம்..!
பாஜக தலைவர் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் உள்ள பையில் பணம் கொண்டு வரப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடக சட்டசபைக்கு மே 10 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக தேர்தல் பணிக்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தார். அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பெருமளவு பணம் கொண்டுவரப்பட்டதாக உடுப்பி மாவட்டம் கப்பு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வினய் குமார் சொர்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
You must be logged in to post a comment Login