Connect with us

Raj News Tamil

இரவு 12 மணிக்கு செல்போனில் பேசிய மருமகள்.. பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றிய மாமியார்..

தமிழகம்

இரவு 12 மணிக்கு செல்போனில் பேசிய மருமகள்.. பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றிய மாமியார்..

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் உள்ள செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முகேஷ்ராஜ். இவருக்கு கீர்த்திகா என்ற மனைவி உள்ளார். அவிநாசி பகுதியில் தங்கி, முகேஷ்ராஜ் வேலை பார்த்து வருவதால், தனது மாமனார் மற்றும் மாமியார் உடன், கீர்த்திகா வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, கீர்த்திகாவின் மாமியாரும், மாமனாரும் வெளியே சென்றுவிட்டு, இரவு 12 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, மருமகள் செல்போனில் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து கோபம் அடைந்த மாமியார், ஆசிட்டை எடுத்து வந்து, அவர் மீது ஊற்றினார்.

இதில், கீர்த்திகாவின் கண், காது, பிறப்புறுப்பு ஆகிய இடங்களில், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அந்த பெண்ணை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே விருத்தாசலம் காவல் நிலையத்தில் சரணடைந்த மாமியார் ஆண்டாளிடம், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top