Connect with us

Raj News Tamil

புதுமணத் தம்பதி படுகொலை: பெண்ணின் தந்தை கைது!

தமிழகம்

புதுமணத் தம்பதி படுகொலை: பெண்ணின் தந்தை கைது!

தூத்துக்குடி முருகேசன் நகரைச் சேர்ந்த மாரிச்செல்வம் (23), இவர் தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். மாரிச்செல்வமும், திருவிக நகரைச் சேர்ந்த பால் வியாபாரம் செய்து வந்த முத்துராமலிங்கம் என்பவரின் மூத்த மகள் கார்த்தகாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

காதல் விவகாரம் குறித்து கார்த்திகாவின் பெற்றோருக்கு தெரியவர அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இவர்கள் தேவர் ஜெயந்தி அன்று வீட்டை விட்டு வெளியேறி, நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர்.

மாரிச்செல்வத்தின் குடும்பத்தினர் திருமணத்துக்கு ஆதரவாக இருந்ததுடன் இருவரையும் தங்கள் வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

மாரிசெல்வம்- கார்த்திகா இவருக்கு திருமணமாகி 3 நாட்கள் ஆகியிருந்த நிலையில் நேற்று வீடு புகுந்து மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் மர்ம கும்பலை தேடி வந்தனர்.

இந்நிலையில் புதுமணத் தம்பதி கொலை வழக்கில் பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், தந்தை முத்துராமலிங்கத்தை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய உறவினர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

More in தமிழகம்

To Top