தமிழகம்
கர்ப்பமான சிறுமி.. கொன்று புதைத்த இளைஞன்.. விடாமல் விரட்டிப் பிடித்த காவல்துறை..
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் பகுதியை சேர்ந்தவர் அகிலன். இவரும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரும், காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் நெருங்கி பழகி வந்ததால், அந்த 17 வயது சிறுமி, கர்ப்பம் அடைந்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அகிலன், தனது காதலியை கொலை செய்துவிட்டு, தனது நண்பர்கள் 2 பேரின் உதவியுடன், உடலை புதைத்துள்ளார்.
இதையடுத்து, தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அகிலனை தேடி வந்தனர். இறுதியில், அவர் சென்னையில் இருப்பதை கண்டறிந்த காவல்துறையினர், அங்கு சென்று கைது செய்தனர்.
தற்போது, சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு, விசாரணைக்காக, அவர் அழைத்து வரப்பட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login