தமிழகம்
அடுத்தடுத்து 3 இடங்களில் கொள்ளை.. பிடிக்க முயற்சித்த பொதுமக்கள்.. கழுகு போல் பறந்து சென்ற திருடன்..
சென்னை தாம்பரம் அருகே உள்ள பீர்கன்காரனை பகுதியில், விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் பூட்டிய பிறகு, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், கோவில் உண்டியலை உடைத்து, திருட முயற்சி செய்தார். ஆனால், சத்தம் கேட்டு பொதுமக்கள் கோவிலுக்குள் வந்ததையடுத்து, அங்கிருந்து அந்த திருடன் தப்பிச் சென்றான்.
இதையடுத்து, ஊர் பொதுமக்கள், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில், விநாயகர் கோவில் மட்டுமின்றி, பக்கத்து தெருவில் இருந்த மற்றொரு கோவிலிலும், பட்டுலிங்கம் என்பவரது வீட்டிலும், அந்த திருடன் கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.
தற்போது, தப்பிச் சென்ற அந்த திருடனை பிடிக்கும் முயற்சியில், காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, திருடன் கோவிலில் இருந்து தப்பிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
You must be logged in to post a comment Login