Connect with us

Raj News Tamil

கால்வாயில் சடலம் கிடப்பதாக வந்த போலீசார்.. திடீரென சடலம் எழுந்து நின்றதால் அதிர்ச்சி.. என்ன கொடுமை சார்..

தமிழகம்

கால்வாயில் சடலம் கிடப்பதாக வந்த போலீசார்.. திடீரென சடலம் எழுந்து நின்றதால் அதிர்ச்சி.. என்ன கொடுமை சார்..

கடலூர் மாவட்டம் முள்ளோடை பகுதியில் இருந்து பரிக்கல்பட்டு செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. இதில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக, அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில், அங்கு வந்த காவல்துறையினர், அங்கிருந்து உடலை லத்தியால் தட்டி பார்த்துள்ளனர். அப்போது, அந்த உடல் எழுந்து உட்கார்ந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள், கால்வாயில் கிடந்த ஆசாமியை மீட்டு, மேலே கொண்டு வந்துள்ளனர்.

அங்கு, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கால்வாயில் கிடந்தவர் சரவணன் என்பதும், மதுபோதையில் அவர் இவ்வாறு செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை எச்சரித்த காவல்துறையினர், அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top