Connect with us

Raj News Tamil

மின்வெட்டால் மக்கள் தொகை அதிகரித்து விட்டது – மத்திய அமைச்சரின் பேச்சால் சர்ச்சை..!

அரசியல்

மின்வெட்டால் மக்கள் தொகை அதிகரித்து விட்டது – மத்திய அமைச்சரின் பேச்சால் சர்ச்சை..!

காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரம் வழங்கப்படாததாலே மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்ற மத்திய அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பா.ஜ.க, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் அடிக்கடி கர்நாடகம் வந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பிரதமர் மோடி ஆட்சியில் கிராமங்களில் 24 மணி நேர மின்சாரம் கிடைக்கிறது என்றும் காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரம் வழக்கப்படாததாலே, மக்கள் தொகை அதிகரித்தது என்றும் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலடி தரும் விதமாக காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, இது முட்டாள்தனமான கருத்து என்றும், தோல்வி முகம் தெரிவதால் நிலையை இழந்து மத்திய அமைச்சர்கள் இவ்வாறு பேசுகிறார்கள் என தெரிவித்தார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top