தமிழகம்
ரோட்டில் நடந்துச் சென்ற புது மாப்பிள்ளை.. உடலில் ஏறி இறங்கிய பேருந்து.. கதறி அழுத மனைவி..
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். 35 வயதாகும் இவர், ரயில்வே துறையில் உதவி அலுவலராக பணியாற்றி வந்தார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணமான இவர், தன்னுடைய மனைவி உடன், திருச்சியில் உள்ள ரயில்வே குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்நிலையில், இவர் இன்று பாரதியார் சாலையில் நடந்து சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில், உடல் நசுங்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மோகன்ராஜின் மனைவி மற்றும் உறவினர்கள், கதறி அழுதது, பார்ப்போரை கலங்க வைத்தது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தனியார் பேருந்தை இயக்கிய வாகன ஓட்டுநர், லேசான மது போதையில் இருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
திருச்சி சாலையில் பயங்கர வேகமாக போட்டிக் கொண்டு வாகனங்களை இயக்குவதாக, தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு முன் வைக்கின்றனர். அவர்கள் மீது அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
You must be logged in to post a comment Login