Connect with us

Raj News Tamil

திமுக சார்பில் நாளை நடைபெறவிருந்த உண்ணாவிரத போராட்டம் தள்ளிவைப்பு

தமிழகம்

திமுக சார்பில் நாளை நடைபெறவிருந்த உண்ணாவிரத போராட்டம் தள்ளிவைப்பு

திமுக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நாளை நடை பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்தின் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவிருந்த திமுக உண்ணாவிரத போராட்டம் வருகிற 23-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எழுச்சி மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் திமுகவின் உண்ணாவிரத போராட்டம் தேதி மாற்றப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top