Connect with us

Raj News Tamil

ரக்சா பந்தன் கொண்டாட செல்ல மறுப்பு; 1 வயது மகனுடன் தாய் தற்கொலை!

இந்தியா

ரக்சா பந்தன் கொண்டாட செல்ல மறுப்பு; 1 வயது மகனுடன் தாய் தற்கொலை!

மகாராஷ்டிராவில் ரக்சா பந்தன் கொண்டாட செல்ல கணவர் அனுமதி மறுத்ததால் 1 வயது மகனுடன் தற்கொலை கொண்ட பெண்.

சமீபத்தில் ரக்சா பந்தனை (ஆகஸ்டு 30) கொண்டாட தன்னுடைய சகோதரியின் வீட்டுக்கு செல்ல கணவரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் குழந்தையை தூக்கி கொண்டு செல்ல கூடாது என கணவர் கண்டித்துள்ளார். இதனால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், மனமுடைந்து பிரியங்கா நேற்று அதிகாலை 1.30 மணியளவில் பிளாட்டின் பால்கனியில் இருந்து குழந்தையுடன் கீழே குதித்துள்ளார்.

சத்தம் கேட்டு பிற தளங்களில் வசித்து வருபவர்கள் படுகாயங்களுடன் இருந்த தாய் மற்றும் மகன் ஆகிய இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், 2 பேரும் உயிரிழந்து விட்டனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in இந்தியா

To Top