இந்தியா
நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் – நீதிமன்றம் அதிரடி
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ராம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிட்டார். அப்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறி சாலை ஒன்றை திறந்து வைத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி ராம்பூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஜெயபிரதா நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரபிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.