Connect with us

Raj News Tamil

பேருந்து நிறுத்தத்திலேயே மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!

Trending

பேருந்து நிறுத்தத்திலேயே மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள காந்தி சிலை பகுதியில் பேருந்து நிழற்குடை அமைந்துள்ளது. நகர் பகுதியில் படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரும், இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து தான், தங்களது வீடுகளுக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில், இந்த பேருந்து நிறுத்தத்தில், 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரும், பாலிடெக்னிக் படித்து வரும் மாணவர் ஒருவரும், சந்தித்துள்ளனர். பின்னர், பேருந்து நிறுத்தத்திலேயே, மாணவிக்கு அந்த மாணவர் தாலி கட்டியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படிக்கும் வயதில் இது தேவையா என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு சென்றதையடுத்து, உரிய விசாரணையை நடத்தி வருகின்றனர்.

படிக்கும் நேரங்களில், இதுபோன்ற கவனத்தை சிதறடிக்கும் விஷயங்கள் நேரும். அதனை தவிர்த்துவிட்டு, மாணவர்கள் படிப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Trending

To Top