Connect with us

Raj News Tamil

போதை ஊசி செலுத்தி கொண்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதி..!

தமிழகம்

போதை ஊசி செலுத்தி கொண்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதி..!

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சஞ்சய்(19) என்பவர் நேற்று இரவு தனது கல்லூரி நண்பர்களான ஸ்ரீராம், தனுஷ் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோருடன் சேர்ந்து கே.கே.நகரில் உள்ள CPWD குடியிருப்பு மைதானத்தில் போதை ஊசியை செலுத்தி கொண்டுள்ளனர். இதில் சஞ்சய் அளவுக்கு அதிகமான போதை ஊசியை செலுத்திக் கொண்டதால் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மாணவன் சஞ்சயை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிவா தனுஷ் என்பவரிடம் இருந்து இந்த போதை மாத்திரைகளை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீஸார் தலைமறைவான சிவா தனுஷை தேடி வருகின்றனர். மேலும் சஞ்சயின் நண்பர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

More in தமிழகம்

To Top