Connect with us

Raj News Tamil

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததை கண்டித்து மாணவிகள் போராட்டம்!

தமிழகம்

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததை கண்டித்து மாணவிகள் போராட்டம்!

செங்கல்பட்டு மாவட்டம் நேற்று முதல் இன்று காலை வரை கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் இன்று அறிவிப்பு வெளியிட்டார்.

திருக்கழுக்குன்றம் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்குள் உள்ளே நுழையும் போது மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது சிலர் மழையில் நனைந்து குளிர் தாங்க முடியாமல் உடல் பாதிக்கும் நிலையில் பள்ளிக்கு வந்தனர். இன்று விடுமுறை அளிக்காததை கண்டித்து மாணவர்கள் ஒன்று சேர்ந்து பள்ளிக்கு முன்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நத்தை கண்டித்து விடுமுறை அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்து மற்றும் அரசு அதிகாரிகள் கண்டித்து விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும் என பெற்றோர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top