Connect with us

Raj News Tamil

இரும்புக்கை மாயாவியில் சூர்யா இல்லை! ஆச்சரிய தகவல்!

சினிமா

இரும்புக்கை மாயாவியில் சூர்யா இல்லை! ஆச்சரிய தகவல்!

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய திரைப்படங்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எடுத்துள்ளார்.

இந்த படத்திற்கு பிறகு, தலைவர் 171, கைதி 2, விக்ரம் 2 ஆகிய படங்களை வரிசையாக அவர் இயக்க உள்ளார். இந்த படங்களையும் முடித்த பிறகு, இரும்புக்கை மாயாவி என்ற தனது கனவு படத்தை எடுக்க உள்ளார்.

இந்நிலையில், இந்த திரைப்படம் குறித்து சுவாரசிய தகவல் ஒன்றை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். அதன்படி, இந்த திரைப்படத்தின் ஸ்கிரிப்டை, முதன்முதலில் நடிகர் கார்த்திக்காக தான் நான் எழுதியிந்தேன்.

ஆனால், அதன்பிறகு, தயாரிப்பாளர் கூறியதற்காக, அந்த கதையை சூர்யாவுக்காக மாற்றி எழுதினேன் என்று கூறினார். இந்த திரைப்படம் தான், லோகேஷ் கனகராஜின் இறுதி திரைப்படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

More in சினிமா

To Top