Connect with us

Raj News Tamil

சாலை தெரியாமல் ஏரிக்குள் இறங்கிய கார்..!

இந்தியா

சாலை தெரியாமல் ஏரிக்குள் இறங்கிய கார்..!

தெலுங்கானா ஹைதராபாத்தில் இருந்து கிளம்பிய கார் ஒன்று விகாரபாத் அருகே சென்ற போது பனிமூட்டம் காரணமாக ஏரியில் விழுந்துள்ளது. அதில் ஒரு பெண் உட்பட 5 பேர் பயணம் செய்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஏரியில் பாதி மூழ்கிய காரில் இருந்த நான்கு பேரை மீட்டனர்.

மேலும் ஒருவர் காணவில்லை என்பதால் போலீசார் நீச்சல் வீரர்களை வரவழைத்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் ஏரிக்குள் மூழ்கிய காரையும் மீட்டனர். பனிமூட்டத்தால் கார் ஒன்று ஏரியில் மூழ்கியதில் ஒருவர் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

More in இந்தியா

To Top