Connect with us

Raj News Tamil

பெண்களை நிர்வாணப்படுத்தப்பட்டு சம்பவம்: கனிமொழி தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்!

அரசியல்

பெண்களை நிர்வாணப்படுத்தப்பட்டு சம்பவம்: கனிமொழி தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்!

பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கண்டித்து, சென்னையில் நாளை திமுக சார்பில் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதற்கான அறிவிப்பை திமுக தலைமை நேற்று வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் எற்பட்டு, பல உயிர்கள் பலியாகின. அண்மையில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் பதற வைத்துள்ளது.

இந்த நிகழ்வுகளை மணிப்பூர் மாநில பாஜக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசும் இந்தக் கொடுமைகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இதன் தொடர்ச்சியாக திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in அரசியல்

To Top