Connect with us

Raj News Tamil

இறந்த மகனின் உடலை தள்ளுவண்டியில் ஏற்றி சென்ற தாய்: உ.பி.,யில் பரிதாபம்!

இந்தியா

இறந்த மகனின் உடலை தள்ளுவண்டியில் ஏற்றி சென்ற தாய்: உ.பி.,யில் பரிதாபம்!

உத்தரபிரதேசத்தில் மீரட் பகுதியில் இறந்த மகனின் உடலை அவரது தாய் தள்ளுவண்டியில் ஏற்றி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

கடந்த செவ்வாய்க்கிழமை ராஜு என்பவர் மதுக்கடை அருகே இறந்து கிடந்தார். பல மணி நேரமாக அவரது உடல் அங்கேயே கிடந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர், ராஜுவின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல எந்த வாகனமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. பின்பு ராஜுவின் உடலை அவரது தாயும், தம்பியும் தள்ளுவண்டியில் ஏற்றி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இறுதிச் சடங்கு செய்வதற்கு போதிய பணம் இல்லாததால் வழிப்போக்கர்களிடம் நிதியுதவி கோரியுள்ளனர். ஆனால் எந்த உதவியும் கிடைக்காததால், மனமுடைந்த அவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுகினர். அங்கு பணியிலிருந்த துணை ஆய்வாளர் அமித்குமார் மாலிக், நிதி திரட்டி இறந்தவரின் இறுதிச் சடங்குகளை செய்திட உதவி செய்தார்.

இளைஞர் உடலை தள்ளுவண்டியில் ஏற்றி சென்ற விடியோ வைரலானதைத் தொடர்ந்து மீரட் தலைமை மருத்துவ அதிகாரி அகிலேஷ் மோகன், இறந்தவர்களை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல வானம் கிடைக்காதது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

More in இந்தியா

To Top