Connect with us

Raj News Tamil

மாரத்தான் போட்டிக்கு வந்த பரிதாப நிலைமை; பாஜக சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் 20 பேர் மட்டுமே பங்கேற்பு!

தமிழகம்

மாரத்தான் போட்டிக்கு வந்த பரிதாப நிலைமை; பாஜக சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் 20 பேர் மட்டுமே பங்கேற்பு!

வருகின்ற மார்ச் மாதம் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருநெல்வேலியில் பாஜக மகளிர் அணி சார்பில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் இருந்து அண்ணா விளையாட்டு அரங்க வரை இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் 20 சிறுமிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் பள்ளி, கல்லூரி மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொள்ளும் வகையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் வெறும் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். ஏராளமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறைந்த நபர்கள் மட்டுமே கலந்து கொண்டதால் நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

எனினும் பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டி அண்ணா விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

மாரத்தான் போட்டி நடத்தப்பட்டால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More in தமிழகம்

To Top