Connect with us

Raj News Tamil

ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு சினிமா பாணியில் வசனம் பேசிய மாணவன்!

இந்தியா

ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு சினிமா பாணியில் வசனம் பேசிய மாணவன்!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆசிரியரின் காலில் துப்பாக்கியால் சுட்டு, 2 மாணவர்கள் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுமித் சிங் என்ற ஆசிரியர் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு எடுத்து வருகிறார். இவர் மாணவர்களில் ஒருவரை மாணவியிடம் பேசுவை கண்டித்துள்ளார். இதையடுத்து மாணவனின் சகோதரர் ஆசிரியரிடம் போனில் வாக்குவாதம் செய்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்து முடிந்து 6 மாதங்கள் ஆகியிருந்த நிலையில் மாணவர்களும் பயிற்சி முடித்து வெளியேறி விட்டனர். இருந்தாலும், மாணவர்கள் ஆசிரியர் மீது கோபத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் கோபத்தில் இருந்த மாணவர்கள் ஆசிரியரை பயிற்சி மையத்துக்கு வெளியே அழைத்து வந்து மாணவன் ஒருவர் ஆசிரியரின் காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளான. மற்றொருவர் அதை வீடியோ எடுத்துள்ளார்.

அதை ஒரு மாணவன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு சினிமா பட பாணியில் பேசி உள்ளான். “6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வருவேன். நான் 40 தோட்டாக்களை உன் உடலில் பாய்ச்ச வேண்டும். இன்னும் 39 மீதம் இருக்கிறது” என்று கூறியுள்ளான். இந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ஆசிரியர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளார். இதுபற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. போலீசார் அந்த மாணவர்களை கைது செய்தனர்.

More in இந்தியா

To Top