Connect with us

Raj News Tamil

ஒரே இரவில் ஏழு வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு..!

தமிழகம்

ஒரே இரவில் ஏழு வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு..!

ராணிப்பேட்டை மாவட்டம் பாரத மிகுமின் (“பெல்”) நிறுவனத்திற்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஏழு வீடுகளில் அடுத்தடுத்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று வீட்டின் உரிமையாளர்களில் சிலர் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்ததாகவும், சிலர் பணிக்கு சென்று இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீடுகளின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு மற்றும் காவல் துறையினர், சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் மற்றும் அருகில் குடியிருப்போரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த குடியிருப்பு பகுதியில் இதேபோன்று மூன்று முறை பூட்டுகள் உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More in தமிழகம்

To Top