Connect with us

Raj News Tamil

நான்குனேரியில் மாணவர், சகோதரியை வெட்டியவர்கள் கைது!

தமிழகம்

நான்குனேரியில் மாணவர், சகோதரியை வெட்டியவர்கள் கைது!

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி பெருந்தெருவைத் சேர்ந்த முனியாண்டி இவருடைய மகன் சின்னத்துரை (17) என்பவர் வள்ளியூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரை அதே ஊரைச் சேர்ந்த சக மாணவர்கள் சிலர் கேலி, கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவன் சின்னதுரை தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் இருந்த சின்ன துரையை மாணவர்கள் சிலர் வெளியே இழுத்துப்போட்டு அரிவாளால் வெட்டிய போது அதைத் தடுக்க வந்த அவரது சகோதரி சந்திரசெல்விக்கும் (14) வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில், பலத்த காயமடைந்த 2 பேரும் திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையறிந்த அவர்களது தாத்தா கிருஷ்ணன் (60) அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நான்குனேரி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜு தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி நான்குனேரி, தென்னி மலை, நெடுங்குளத்தைச் சேர்ந்த 7 சிறார்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து, திருநெல்வேலி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

More in தமிழகம்

To Top