இந்தியா
டெல்லி முதல்வரை சுட்டுக் கொல்ல போகிறேன்…போனில் வந்த மிரட்டல்….
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுட்டு கொல்லப்போவதாக கொலை மிரட்டல் விடுத்த நபரை நேற்று நள்ளிரவு போலீசார் கண்டுபிடித்தனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுட்டு கொல்லப்போவதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அந்த நபரை டெல்லி போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். நள்ளிரவில் அவரை கண்டுபிடித்தனர்.
கொலைமிரட்டல் விடுத்த அந்த நபர் டெல்லியின் முண்ட்கா பகுதியில் வசிப்பவர் என்றும், 38 வயதான அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
You must be logged in to post a comment Login