தமிழகம்
தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய வடமாநில தொழிலாளர்கள்..? தமிழகத்திலேயே இந்த நிலையா? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
தமிழகத்தில் நல்ல பொருளாதார சூழல் நிலவி வருவதால், வடஇந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழிலாளர்கள், இங்கு வந்து பணிபுரிகின்றனர். இவர்களுக்கான ஊதியம் மிகவும் குறைந்த அளவே இருப்பதால், இங்குள்ள வேலைகளுக்கு அவர்களே பணியமர்த்தப்படுகிறார்கள்.
இதனால், தங்களுடைய வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக தமிழக தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்களுக்கும், தமிழக தொழிலாளர்களுக்கும் இடையே, பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இரண்டு தரப்பினரும், ஒருவொருக்கொருவர் தாக்கிக் கொண்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி, பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login