Trending
டி.என்.பி.சி, டி.ஆர்.பி வேலை வாய்ப்பு… தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், இதனை எதிர்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின், அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில் தமிழக அரசு அரசாணை ஒன்று பிறப்பித்துள்ளது. அதில் அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதிக் கொள்கைகளை செயல்படுத்திட, உரிய சட்டதை இயற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக சட்ட நிபுணர் குழு ஒன்று அமைத்து ஆணையிட்டது.
நேற்று உச்ச நீதிமன்றம் EWS இட ஒதுக்கீடு 10% செல்லும் என்று தீர்ப்பளித்த நிலையில், இந்த நடவடிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login