தமிழகம்
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
இவ்வளவு கோடை வெயிலால் பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள், தற்போது பெய்து வரும் கனமழையால், மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் சில நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வங்கக் கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும், இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login