Connect with us

Raj News Tamil

சென்னை ரயில் தடம் புரண்டு விபத்து! – 5 பயணிகள் காயம்!

தமிழகம்

சென்னை ரயில் தடம் புரண்டு விபத்து! – 5 பயணிகள் காயம்!

நாடு முழுவதும் ரயில் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்துடனே ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி நிலையத்தில் குறிப்பிட்ட இடத்தில நிற்காமல் சற்று முன்னேறியதால், சுவற்றில் மோதி 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 5 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ரயில் விபத்து காரணமாக ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. விபத்து குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More in தமிழகம்

To Top