Connect with us

Raj News Tamil

லிவிங் டு கெதர் உறவு.. துணையை கொன்ற திருநங்கை.. காரணம் என்ன?

இந்தியா

லிவிங் டு கெதர் உறவு.. துணையை கொன்ற திருநங்கை.. காரணம் என்ன?

லிவிங் டு கெதர் உறவு முறையில் வாழும் ஜோடியினர், தகராறு ஏற்பட்டு, கொலை செய்யும் அளவிற்கு செல்லும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, காவல்துறை தரப்பில், பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதே மாதிரியான கொடூர கொலை சம்பவம், மகாராஷ்டிராவில் நடைபெற்றுள்ளது. அதாவது, மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி பகுதியை சேர்ந்த திருநங்கைகள் இரண்டு பேர், காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து, தனியாக வீடு எடுத்து தங்கிய இவர்கள், லிவிங் டு கெதர் உறவு முறையில் இருந்து வந்தனர்.

ஆரம்பத்தில் நன்றாக சென்றுக் கொண்டிருந்த இவர்களது உறவு, நாட்கள் செல்ல செல்ல, சண்டையும் சச்சரவுமாக மாறியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினமும், காதல் ஜோடி இருவருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு தங்கை இன்னொரு திருநங்கையின் மீது, செங்கல்லை எடுத்து வீசியுள்ளார்.

இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் மிதந்து, பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், திருநங்கையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த அவர்கள், தலைமறைவாக உள்ள திருநங்கையை தேடி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top